தமிழகத்தை ஆண்ட, ஆளுகின்ற அல்லது ஆளத் துடிக்கி ன்ற ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதன் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி கொக்கி போல தொங்கி கொண்டே இருக்கும்! இது சில சமயம் எதிர் பார்த்தபடியும் பல சமயம் எதிர்பார்க்காதபடியும் நடப்பதுண்டு! இப்போது உள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் அடுத்த முதல்வராக ஆசைப்படுபவர்களில்,அதற்கு வாய் ப்பு இருப்பவர்களில் யார் கொஞ் சமாவது நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறா ர் என்பதை கொஞ்சம் என் பார்வையில் பார்க்கிறேன்! நமது தமிழ்நாட்டில் தலைவர் என்பவர் வெறும் மக்கள் செல்வாக்கை மட்டுமே வைத்து முடி வு செய்யப்படுகிறார்! இது கொஞ்சம் ஆபத்தானது!
தலைவர் மட்டுமே இங்கு முதலமைச்சர் ஆக கூடிய சூழ்நிலையில் அவர் நல்ல நிர்வாகியாகவும் இரு ப்பது அவசியமாகிறது! அந்த வகையி ல் யார் கொஞ்சம் நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார் என்று என் அறிவுக்கு எட்டியவரையில் கொஞ்சம் அலசிப்பார்க்கிறேன்! இந்த கட்டு ரையின் முடிவில் என்னை ரத்தத்தின் ரத்தமாகவோ அல்லது உடன் பிறப்பாகவோ பார்ப்பது உங்கள் பார்வையில் உள்ளது! முதலில் இப்போது உள்ள முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதல்வர் எப் படி தலைவர்கள் ஆனார்கள் பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்க்கலாம்!
ஆரம்ப காலத்தில் ஒரு நடிகையாக மட்டுமே தமிழர்களுக்கு அறிமுகமானவர் பின்னர் தலைவியாக மாறியது தமிழன் மட்டும் அல்ல, அவரே எதிர்பார்க்காததுதான்! அடுத்து என்ன என்று யோசிக்கும் முன்பாகவே சாமர்த்தியமாக முடிவெடுத்து அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டார்! எம்.ஜி.ஆரின் புகழின் நிழலிலே அரசியல் செய்துகொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரிடமே அரசியல் செய்தது வரலாறு! ஆனாலும் தன்னை எம்.ஜி.ஆர் தவிர்க்க முடியாமல் பார்த்துக்கொண்டது இவரது திறமை! எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு இரண்டாகப் பிளந்த அ.தி.மு.கவை திறமையில்லாத எதிர்கூட்டத்தால் ஒன்றாக்கிக் கொண்டு அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்தார்!
இவர் அதிமுகவை கொண்டு மக்களிடம் சேர்த்ததை விட அ.தி.மு.கவின் இரட்டை இலை இவரை அதிகமாகவே மக்களிடம் சேர்த்தது! அதே நேரத்தில் ராஜீவின் மரணமும் சேர்ந்துகொள்ள சுலபமாகவே ஆட்சி அதிகாரத்தை ருசி பார்த்தவர்! ஆனாலும் கட்சியை விட்டு எத்தனை பேர் போனாலும் இன்னும் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது இவரது திறமைதான்! இவர் சிறந்த நிர்வாகி என்றால் ஆம் என்று தைரியமாக சொல்லலாம்! ஆனால் அதை நல்ல வழியில் செயல்படுத்துகிறாரா என்று கேட்டால் யோசிக்க வேண்டி வரும்! நிர்வாகத்தை விட கருணாநிதியை பற்றியே அதிகம் கவலைப்படுவதால் இவரது நிர்வாகம் சிலசமயம் கடிவாளம் இல்லா குதிரை போல தறிகெட்டு ஓடுகிறது!
தி.மு.க தலைவர் கருணாநிதி! ஆரம்பகாலத்தில் தனது போராட்ட குணத்தால் தலைமையை ஈர்த்தவர்! தனக்கு சமமான தகுதியுடயவர்களையும் தனக்கு போட்டி என்று நினைக்க கூடியவர்களையும் சமயம் பார்த்து தட்டி வைத்து தலைவர் என்று தன்னைத்தானே அடையாளப்படுத்திக்கொண்டவர்! ஆனால் அதற்காக அவர் உழைத்த உழைப்புகளையும் தாங்கி கொண்ட சோதனைகளையும் புறந்தள்ள முடியாது! தனது எழுத்துக்களால் அந்தக்காலகட்ட இளைஞர்களையும் இந்தி எதிர்ப்பால் மாணவர்களையும் உசுப்பிவிட்டு அவர்களைக்கொண்டே கட்டி எழுப்பினார் தனக்கான தி.மு.கவை! இன்றுவரை தி.மு.கவில் எத்தனை கோஷ்டிகள் இருந்தாலும் தலைவர் பேச்சுக்கு மறு பேச்சில்லை எனபது கண்கூடு!
அவர்மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழக அரசியலை இவரை சுற்றியே ஓட வைப்பதுதான் இவரது சாதனை! இவர் சிறந்த நிர்வாகி என்றால் ஆம் என்று சொல்லலாம்! ஆனால் தனது ஒவ்வொரு அறிவிப்பிலும் தனக்கான வாக்குகளை உறுதிப்படுத்திக் கொள்வதில்தான் ஆர்வம் அதிகம் இருக்கும்! கடந்த ஆட்சியில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தை வளர விட்டு ஜெயலலிதாவை முதல்வராக்கியதில் இவர் பங்கு அதிகம்! தடி எடுத்தவன் எல்லாம் தன்டால்காரன் ஆகியது இவருக்கு நிர்வாகத் திறமை இல்லையா அல்லது நிர்வாகமே இவர் கையில் இல்லையா என்ற சந்தேகத்தை வலுவாக்கி இவருக்கு ஓய்வு கொடுக்க வைத்தது!
இரண்டு பெரிய கட்சிகளை தவிர்த்து, அடுத்த முதல்வராக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் தே.மு.தி.க விஜயகாந்த்தை பார்ப்போம்! இவருக்கு ஆசை இருக்கும் அளவிற்கு அனுபவம் இல்லை! மக்கள் சேவைக்கு படிப்பு அவசியம் இல்லை என்று காமராஜரையும் எம்.ஜி.ஆரையும் உதாரணம் சொல்லிக்கொள்ளலாம்! ஆனால் அவர்கள் காலம் வேறு இப்பொழுது உள்ள சூழ்நிலை வேறு! கடந்த இரண்டு தேர்தல்களில் இவர் கொடுக்கும் வாக்குறுதிகளை பார்த்தால் இவரும் ஒரு அரசியல்வாதியாக ஆசைப்படுகிறாரே தவிர மாநிலத்தை நிர்வாகம் செய்ய ஆசைப்பட வில்லை!
இவரது ரசிகர்களையும் கட்சி உறுப்பினர்களையும் தாண்டி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த இவர் இன்னும் உழைக்க வேண்டும்! ஆனால் இவரும் சட்டமன்றம் போகமாட்டேன் என்று சொல்லி சேம் குட்டை சேம் மட்டை என்று நிரூபித்து கொண்டிருக்கிறார்! மக்கள் பிரச்சனையை மக்கள் மத்தியில் பேச எம்.எல்.ஏ பதவியும் எதிர்கட்சி தலைவர் பதவியும் எதற்கு? மேலும் கட்சியை நிர்வாகம் செய்வது மட்டுமே மாநிலத்தை நிர்வாகம் செய்யும் தகுதியாகி விடாது! ஆகக்கூடி பார்த்தால் இன்னும் இரண்டு பொதுத்தேர்தல்கள் வரை வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கவேணா செய்யலாம்! முதல்வர் ஆவதற்கு இவர் இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும்! அதுதான் தமிழகத்திற்கும் நல்லது!
அடுத்து வை.கோ! இவர் நல்ல மனிதர்! இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் ஊழல் போன்ற கரும்புள்ளிகள் இல்லாதவர்! ஆனால் நல்ல மனிதர் எனபது மட்டும் சிறந்த நிர்வாகிக்குத் தகுதியாகிவிடாது ! இவரது ஆரம்ப காலத்தில் இருந்து பார்த் தோமானால் எந்த பிரச்சனையையும் ஆக்கப்பூர்வமாக அணுகாமல் உணர்ச்சியின் வேகத்திலே அனுகிக்கொண்டிருக்கிறார்! கூட் டணி மாறுவது அரசியலில் சகஜம் என்றாலும் எந்த தலைவரை எதிர்த்து ஆறு உயிர்களை தியாகம் செய்து புதிய கட்சி கண்டாரோ அவரிடமே போய் அண்ணே.. என்று கண்கலங்கி நின்றதை மக்கள் ரசிக்கவில்லை! அன்றைக்கு சரியத் துவங்கிய அவரது நம்பகத்தன்மையை இன்றுவரை அவரால் மீட்க முடியவில்லை!
மேலும் முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் போன்ற பிரச்சனைகளில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதில் அந்தந்த பகுதி மக்களோடு மட்டுமே நின்றுவிடுகிறார்! தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனையான மின்சாரம், விலைவாசி போன்ற பிரச்சனைகளில் இவரது நிலைப்பாடு தெரியாமலே போகிறது! ஆக மொத்தம் இவர் முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்புகள் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது! ( கருணாநிதிக்கு பிறகான தி.மு,க. முடிவு செய்யும் என்று காத்திருக்கிறார் ) ஆனால் அப்படி இவர் முதலமைச்சர் ஆனாலும் தமிழகத்தில் பெரிய நிர்வாக மாற்றங்கள் எதுவும் ஏற்ப்பட்டுவிடாது என்பதே உண்மை!
அடுத்து 2016 ல் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்லித்திரியும் ப.ம.க வையும் காங்கிரசையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை! ஏனென்றால் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் ப.ம.கவும், தனக்கு இருப்பது பித்தம் என்றே தெரியாத நிலையில்தான் காங்கிரசும் இருக்கின்றன! இந்த பிரெண்ட், வெளிநாட்டு மாப்பிள்ளை கேரக்டர் எல்லாம் செய்ய ஆசைப்படாமல் ஒன்லி ஹீரோதான் என்பதுபோல இப்போது செந்தமிழன் ( நானெல்லாம் பச்சை தமிழன் ) சீமான் களம் இறங்கி உள்ளார்! அதுபோக சண்டை காட்சிகளில் குறுக்கும் நெடுக்குமாக சிதறி ஓடும் மக்கள் போல திருமாவளவன், சரத்குமார், கிருஷ்ணசாமி போன்றோரும் உள்ளனர்! இவங்களும் இல்லைனா போரடிக்கும்ல?
அ.தி.மு.க மற்றும் தி.மு.கவில் யாருக்கு எப்படி வாய்ப்புகள் இருக்கு என்பதைப்பற்றி அடுத்தபதிவில் பார்க்கலாம்! ( சஸ்பென்ஸ்க்காக இல்லை! உண்மைலே பதிவின் நீளம் கருதி மட்டுமே இந்த முடிவு! )
இரண்டாம் பாகம் படிக்க இங்கே சொடுக்கவும்!
இரண்டாம் பாகம் படிக்க இங்கே சொடுக்கவும்!
captain VIJAYAKANTH.
ReplyDeleteRAMARAJAN OR KANCHA KARUPU
ReplyDelete